ADDED : ஜூலை 13, 2024 07:06 AM
சிவகாசி : சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் கல்வித் துறை சார்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள்நடந்தது.
தமிழ்த்துறை தலைவர் கிளிராஜ் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலாஜி தலைமை வகித்தார்.
கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், பாடங்களை படிப்பதன் மூலம் நிகழ்கால அறிவியல் வாழ்க்கையை புரிந்து கொள்வதன் மூலமாக உங்களை நீங்கள் மேம்படுத்தி கொள்ள முடியும்.
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது என்றார். மாணவன் பாலாஜி நன்றி கூறினார்.