பட்டாசு விபத்தில் பலி 4 ஆக உயர்வு
பட்டாசு விபத்தில் பலி 4 ஆக உயர்வு
பட்டாசு விபத்தில் பலி 4 ஆக உயர்வு
ADDED : ஜூலை 14, 2024 05:14 AM

சிவகாசி : சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவலுாரைச் சேர்ந்த சேர்ந்த சங்கரவேல் நேற்று அதிகாலை இறந்தார்.
சிவகாசி சோலை காலனியை சேர்ந்தவர் முருகவேல். இவருக்கு எம்.புதுப்பட்டி அருகே காளையார்குறிச்சியில் நாக்பூர் உரிமம் பெற்ற சுப்ரீம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு ஜூலை 9ல் நடந்த வெடி விபத்தில் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் 47, முத்து முருகன் 45, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும்
சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரோஜா 55, செவலுாரை சேர்ந்த சங்கரவேல் 54, காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சரோஜா நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் , சிகிச்சை பெற்று வந்த சங்கரவேலும் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு உயிரிழந்தார். இதனால் பலி நான்காக உயர்ந்தது.