Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டிரைவர் வெட்டிக்கொலை

டிரைவர் வெட்டிக்கொலை

டிரைவர் வெட்டிக்கொலை

டிரைவர் வெட்டிக்கொலை

ADDED : ஜூன் 06, 2024 11:14 PM


Google News
சிவகாசி:சிவகாசி அருகே திருத்தங்கலில் மண் அள்ளும் இயந்திர டிரைவரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 33. இவரது மனைவி பாண்டிச்செல்வி, 29. இவர்களுக்கு 7 மற்றும் 4 வயதில் இரு மகள்கள் உள்ளனர். கருப்பசாமி, மண் அள்ளும் இயந்திர டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில், நேற்றிரவு 8:30 மணிக்கு முத்துமாரியம்மன் காலனி சக்தி விநாயகர் கோவில் அருகே கருப்பசாமியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர். சம்பவ இடத்தில் டி.எஸ்.பி., சுப்பையா ஆய்வு செய்தார். கொலைக்கான காரணம் குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us