ADDED : ஜூலை 19, 2024 06:28 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட பொது சுகாதாரத்தறை அலுவலர் சங்கம் சார்பில் ஒப்பளிக்கப்பட்டுள்ள 88 நலக் கல்வியாளர் பணியிடத்தை நிரப்புதல், அரசாணை எண் 337, 338 திரும்ப பெறுதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலம் முன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விசய குரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்டச் செயலாளர் சந்திரசேகர், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வைரவன், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முனியாண்டி, மாநிலத் துணைத் தலைவர் கண்ணன், காஜா மைதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.