Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கறிஞர் மீது வழக்கு

போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கறிஞர் மீது வழக்கு

போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கறிஞர் மீது வழக்கு

போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கறிஞர் மீது வழக்கு

ADDED : ஜூலை 11, 2024 04:45 AM


Google News
விருதுநகர்: அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞரான வெள்ளையராஜா 44. இவர் போலி பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்ததற்காக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சாத்துார் அருகே அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளையராஜா. இவர் 1995 - -1996 ஆண்டு ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். ஆனால் 4 பாடங்களில் தேர்ச்சி பெறாததால் சாத்துாரில் தனியார் பயிற்சி மையத்தில் பயின்று 3 பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றார்.

மேலும் தேர்ச்சி பெறாத வேதியியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண் 63 க்கு பதிலாக 73 என போலி மதிப்பெண் சான்றிதழை தயார் செய்து 1999 -- 2000 ஆண்டு மதுரை அரசு சட்டக்கல்லுாரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பில் சேர்ந்தார். இவரின் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் குறித்து சந்தேகம் எழுந்ததால் கல்லுாரி முதல்வர், சென்னை அரசு தேர்வுகள் இயக்கத்திடம் உண்மை தன்மையை கேட்டார்.

வெள்ளையராஜா சமர்பித்துள்ள பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் போலியானது என தேர்வுகள் இயக்கம் இணை இயக்குநர் தெரிவித்தார். இதையடுத்து மதுரை சட்டக்கல்லுாரியில் இருந்து வெள்ளையராஜா தானாகவே விலகினார்.

ஆனால் மதுரை காமராஜ் பல்கலையில் எம்.ஏ., முடித்து திருநெல்வேலி அரசு சட்டக்கல்லுாரியில் 3 ஆண்டுகள் முடித்து தமிழக பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்.

போலி பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த வெள்ளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜ் 43, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின் படி வெள்ளையராஜா மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us