ADDED : ஜூன் 02, 2024 03:21 AM
ஸ்ரீவில்லிப்புத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வைத்தியநாத சுவாமி , சிவகாமி அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்கள், மாலை, கிளி, மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது.
நேற்று இரவு 6:00 மணிக்கு மேல் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாட வீதிகள், ரத வீதிகள் சுற்றி வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு மங்கலப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இதனை வைத்தியநாதசுவாமி கோயில் பட்டர்கள் பெற்றுக் கொண்டனர்.