ADDED : ஜூலை 21, 2024 04:14 AM
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி இளைஞர் நலத்துறை சார்பில் 2024 -- 25 கல்வியாண்டில் சேர்ந்த இளங்கலை முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்குத் தனித்திறன் வெளிப்பாட்டு நிகழ்வு நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். கல்லுாரி இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார்.
முதலாம் ஆண்டு மாணவிகள் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் நந்தினி நன்றி கூறினார் .ஏற்பாடுகளை இளைஞர் நலத்துறை உறுப்பினர்கள் செய்தனர்.