Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சாக்கடை ஆறாக மாறி வரும் வைப்பாறு

சாக்கடை ஆறாக மாறி வரும் வைப்பாறு

சாக்கடை ஆறாக மாறி வரும் வைப்பாறு

சாக்கடை ஆறாக மாறி வரும் வைப்பாறு

ADDED : ஜூலை 19, 2024 06:25 AM


Google News
சாத்துார் : சாத்துார் வைப்பாற்றில் தொடர்ந்து சாக்கடை கலந்து வருவதால் வற்றாத சாக்கடை ஆறாக மாறிவருகிறது.

வெம்பக்கோட்டையில் உற்பத்தியாகும் வைப்பாறு துாத்துக்குடி மாவட்டம் வேம்பாறு அருகே கடலில் கலக்கிறது. துாய நீராக பிறப்பெடுத்து வரும் வைப்பாற்றில் வெம்பக்கோட்டை ஊராட்சி தொடங்கி சாத்துார் நகராட்சி வரை உள்ள கிராமங்கள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் இருந்து வெளியாகும் சாக்கடை கழிவு நீர் முழுவதுமாக கலந்து வருகிறது.

இந்த நதியில் சங்கரநத்தம் செக்டேம், சாத்துார் செக்டேம், பெரிய கொல்லப்பட்டி செக் டேம், நாகலாபுரம் செக் டேம் கள் உள்ளன. இவற்றில் அதிக அளவில் கழிவு நீரே தேங்கி நிற்கிறது.

இதனால் சாத்துார் ,சுற்று கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் மாசு அடைந்து வருவதோடு கழிவுகள் கலந்த சாக்கடை நீராக மாறி வருகிறது.

தற்போது கண்மாய் , கிணற்று பாசனம் மூலம் சிறிய அளவில் விவசாய பணிகள் நடந்து வரும் நிலையில் ஆறுகளில் தொடர்ந்து கலந்து வரும் சாக்கடை கழிவு நீர் காரணமாக கிணற்றில் தண்ணீரின் தன்மை மாறுபட்டு கிணற்று பாசனம் மூலம் நடைபெறும் விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆற்றில் நேரடியாக சாக்கடை கலந்து வரும் இடங்களை பொதுப்பணித்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சாக்கடையை சுத்திகரித்த பின்னர் ஆற்றில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வைப்பாறு வடிநில பகுதியில் பெய்து வரும் மழை நீர்முழுவதும் வைப்பாற்றுக்கு வர நீர்வரத்துக் கால்வாய்களை புதியதாக அமைத்திட வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us