/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 2 குழந்தை, 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்பு 2 குழந்தை, 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்பு
2 குழந்தை, 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்பு
2 குழந்தை, 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்பு
2 குழந்தை, 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்பு
ADDED : மார் 14, 2025 06:28 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஜன. முதல் தற்போது வரை 2 குழந்தை, 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2025 ஜன. முதல் தற்போது வரை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு படையுடன் கூட்டாய்வுகள், சைல்டு லைன் புகார்களின் அடிப்படையில் உணவு, கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுமான பணிகளில் ஆய்வு செய்ததில் 2 குழந்தை தொழிலாளர்கள், 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை பணிக்கமர்த்திய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் இதுவரை பல்வேறு கால கட்டங்களில் 6 குழந்தை தொழிலாளர்களை பணிக்கமர்த்திய 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: இது போன்று வேலைக்கு அமர்த்துவோர் மீது எப்.ஐ.ஆர்., பதியப்பட்டு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பணிக்கு அனுப்பும் பெற்றோருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பள்ளி விடுமுறை நாட்களிலும் இது போன்று பணிக்கமர்த்துவது கூடாது, என்றார்.