ADDED : மார் 14, 2025 06:33 AM
விருதுநகர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, சி.பி.எஸ்.,சில் ஓய்வு பெற்றவர்கள், மரணமடைந்தவர்களுக்கு பென்ஷன் வழங்கி பணிக்கொடை வழங்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் விருதுநகரில் மறியல் போராட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் தலைமை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் மாநில பொருளாளர் புகழேந்தி, ஆதிதிராவிட நலத்துறை அடிப்படை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ராஜன் நன்றிக்கூறினார். மறியலில் ஈடுபட்ட 127 பேர் கைது செய்யப்பட்டனர்.