ADDED : மே 26, 2025 12:21 AM
விழுப்புரம் : வளவனுார் அருகே ஆற்று மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று சின்ன கள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, ஆற்றில் மினி வேனில் அனுமதியின்றி மணல் கடத்திய சின்னமடம் கிராமத்தைச் சேர்ந்த அரிவரதன் மகன் பிரவின்ராஜ், 19; என்பவரை கைது செய்து, வேனை பறிமுதல் செய்தனர்.