Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

ADDED : ஜன 06, 2024 05:01 AM


Google News
விழுப்புரம், : விழுப்புரத்தில் கூலி தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த லோகு மகன் ஆனந்தகுமார், 48; கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 1ம் தேதி, வழுதரெட்டி அருகே உள்ள டீ கடையில், அவர் டீ குடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் கணேஷ், 21; சிகரெட் வாங்கி கொடுக்கும்படி கேட்டு தகராறு செய்து, தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து, ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் கணேஷ் மீது வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us