ADDED : பிப் 06, 2024 05:52 AM
விழுப்புரம், : விழுப்புரம், விராட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி, 41; நகை தொழிலாளி. இவரிடம், சில தினங்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் நகை செய்து தரக்கோரி 90 கிராம் தங்கம் கொடுத்துள்ளார். நகை செய்து தர தாமதமாகியதால் பிரகாஷ் கேட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த குமாரசாமி கடந்த 3ம் தேதி வீட்டில் பூச்சி மருந்தை குடித்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.