Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பெண்ணுக்கு கத்திவெட்டு: 2 பேருக்கு போலீஸ் வலை

பெண்ணுக்கு கத்திவெட்டு: 2 பேருக்கு போலீஸ் வலை

பெண்ணுக்கு கத்திவெட்டு: 2 பேருக்கு போலீஸ் வலை

பெண்ணுக்கு கத்திவெட்டு: 2 பேருக்கு போலீஸ் வலை

ADDED : செப் 05, 2025 09:52 PM


Google News
திண்டிவனம்:

வீட்டு மனை பிரச்னையில், பெண்ணை கத்தியால் வெட்டிய தகராறில் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல், 40; இவரது பெரியப்பா சுப்ரமணி, 59; இவர்களுக்கிடையே வீட்டு மனை பிரிப்பதில் முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் முத்து வேல் வீட்டின் குடிநீர் குழாயை சுப்ரமணி மற்றும் அவரது மகன் விமல்ராஜ், 25; ஆகியோர் உடைத்துள்ளனர். இதனை முத்துவேல் மற்றும் அவரது மனைவி பூவிழி, 38; தட்டிக்கேட்டதால் ஆத்திர மடைந்த விமல் ராஜ் கத்தியால் பூவிழியின் முகத்தில் வெட்டினார். பலத்த காயமடைந்த பூவிழி திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வெளிமேடுபேட்டை போலீசார், சுப்ரமணி, விமல்ராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us