Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வயிற்று வலியால்  பெண் தற்கொலை

வயிற்று வலியால்  பெண் தற்கொலை

வயிற்று வலியால்  பெண் தற்கொலை

வயிற்று வலியால்  பெண் தற்கொலை

ADDED : ஜூன் 06, 2025 06:47 AM


Google News
விழுப்புரம்,; வானுார் அருகே வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வானுார் அருகே கடகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகள் முத்தம்மாள் (எ) ராஜி,18; பிளஸ் 2 படித்து விட்டு வீட்டிலிருந்தார்.

வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் மனமுடைந்து நேற்று முன்தினம் தனது வீட்டில் அரளிவிதை சாப்பிட்டு, மயங்கி விழுந்தார். உடன் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us