Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

ADDED : செப் 09, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது.

பூஜையை முன்னிட்டு அதிகாலை அம்மன் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதைத் தொடர்ந்து, அம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் முன்னிலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்தனர். இரவு 8.30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பெண்களுக்கு மங்கள பொருட்கள் பிரசாதமாக வழ ங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us