Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வழிப்பறி ஆசாமி மீது 'குண்டர்' சட்டம் பாய்ந்தது

வழிப்பறி ஆசாமி மீது 'குண்டர்' சட்டம் பாய்ந்தது

வழிப்பறி ஆசாமி மீது 'குண்டர்' சட்டம் பாய்ந்தது

வழிப்பறி ஆசாமி மீது 'குண்டர்' சட்டம் பாய்ந்தது

ADDED : ஜன 05, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் நடந்த வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விக்கிரவாண்டியில் கடந்த நவம்பர் 20ம் தேதி நடந்த செயின் பறிப்பு வழக்கில், ஆர்.சி., மேலக்கொந்தை கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் மதன்குமார், 22; என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்கு உள்ளதால், அவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., சசாங்சாய் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் பழனி, மதன்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் உள்ள மதன்குமாரிடம் விக்கிரவாண்டி போலீசார் வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us