Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/குட்கா வைத்திருந்தவர் கைது

குட்கா வைத்திருந்தவர் கைது

குட்கா வைத்திருந்தவர் கைது

குட்கா வைத்திருந்தவர் கைது

ADDED : பிப் 23, 2024 10:22 PM


Google News
விழுப்புரம் : விழுப்புரத்தில் குட்கா வைத்திருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் பூந்தோட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ரங்கநாதன் வீதியில் தனியார் பள்ளி அருகே பையுடன் சந்தேகத்துடன் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், ஜார்கண்ட் மாநிலம், மர்கமுண்டாமாத்துப்பூர், பான்சிங் பகுதியைச் சேர்ந்த அப்துல்அமீது மகன் முகமதுமுஜாகித் அன்சாரி, 27; என்பதும், அவர் குட்கா பாக்கெட்டுகள் எடுத்து வந்து விற்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us