ADDED : பிப் 06, 2024 05:53 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கே.கே.,ரோடு பகுதியில் கஞ்சா விற்பதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு விற்பனைக்காக 15 கிராம் கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த மணி, 35; என்பவரை கைது செய்தனர்.