ADDED : பிப் 11, 2024 02:58 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் பைக் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை நேரு வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 19; என்பதும், அவர் வந்த பைக் கடந்த 4ம் தேதி இரவு திண்டிவனம் கிடங்கல் (1) ஒத்தவடை தெருவைச் சேர்ந்தமுருகன் என்பவரிடம் இருந்து திருடியது எனவும் தெரியவந்தது.
உடன் கார்த்திகேயனை போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.