Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தெற்கு மாவட்ட தி.மு.க., ஆலோசனை கூட்டம்; மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு

தெற்கு மாவட்ட தி.மு.க., ஆலோசனை கூட்டம்; மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு

தெற்கு மாவட்ட தி.மு.க., ஆலோசனை கூட்டம்; மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு

தெற்கு மாவட்ட தி.மு.க., ஆலோசனை கூட்டம்; மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு

ADDED : மே 30, 2025 04:31 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்; விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் விக்கிரவாண்டி, திருக்கோவிலுாரில் இன்று தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப் பாளர் கவுதமசிகாமணி அறிக்கை :

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க.,விற்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (30ம் தேதி) காலை 10.00 மணிக்கு நடக்கிறது.

விக்கிரவாண்டி டோல்கேட் அருகேவுள்ள நுார் ரெசிடென்சி அரங்கில் கூட்டம் நடக்கிறது.

இதையடுத்து, 11.30 மணிக்கு திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செவலை சாலையில் உள்ள தேவி முருகன் மண்டபத்தில் நடக்கவுள்ளது.

மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்குகிறார். இதில், மண்டல பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்முடி எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்கின்றனர்.

எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன், தலைமை தொகுதி பொறுப்பாளர்கள் ஜெயராஜ், கார்த்திகேயன், தலைமை வழக்கறிஞர் சுவை சுரேஷ், மாநில மகளிரணி பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி, மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், கற்பகம் முன்னிலை வகிக்கின்றனர்.

அந்தந்த சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு, சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us