Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புதுச்சேரி மது விற்றவர் கைது 

புதுச்சேரி மது விற்றவர் கைது 

புதுச்சேரி மது விற்றவர் கைது 

புதுச்சேரி மது விற்றவர் கைது 

ADDED : மே 30, 2025 04:30 AM


Google News
Latest Tamil News
வானூர்; கிளியனுார் அருகே புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனூர் அடுத்த எடையான்குளம் பகுதியில் புதுச்சேரி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கிளியனூர் சப் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது, எடையான்குளம் மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் வைத்து விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பேரில் வீட்டின் உரிமையாளரான காதர்பாஷா, 56; என்பவரை பிடித்து விசாரித்த தில், புதுச்சேரி மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த 29 புதுச்சேரி மதுபாட்டில்கள், கார் மற்றும் ரூ. 5500 பணத்தை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us