ADDED : ஜன 05, 2024 10:25 PM
விழுப்புரம் : வளவனுார் அருகே சூதாடிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று புதுப்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அக்கிராமத்தை சேர்ந்த அய்யப்பன்,26; ஆனந்த்,35; வீரசந்திரன்,32; சம்பத்,48; பிரகாஷ்,26; பாலகுரு,23; ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் ரூ.350 பணம் பறிமுதல் செய்தனர்.