ADDED : மே 21, 2025 11:22 PM
விழுப்புரம்: குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், செங்காடு பகுதியை சேர்ந்த சகாயசெல்வம், 34; பெட்டிக்கடையில் சோதனை செய்தார். அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. சகாயசெல்வத்தை கைது செய்து விசாரித்தபோது, புதுச்சேரி கொத்தபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 50; என்பவர், குட்கா பொருட்கள் சப்ளை செய்தது தெரிந்தது.
போலீசார் கொத்தபுரிநத்தம் சென்று, சிவக்குமாரின் கார் மற்றும் அதிலிருந்த 110 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். சிவக்குமார் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.