Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

ADDED : மார் 21, 2025 04:17 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் நித்யானந்தா நகர சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நித்யானந்தா நகரில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் மண் சாலைகளாக உள்ளன.

மேலும், பாதாள சாக்கடை வசதியில்லாததால், கழிவுநீர் கால்வாய் மட்டுமே உள்ளது. கடந்த சில தினங்களாக கழிவுநீர் கால்வாயில் தேங்கி மண் சாலையில் வழிந்தோடி சேறும் சகதியுமாக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதோடு, பாதாள சாக்கடை வசதியை ஏற்படுத்தி சாலை அமைத்துத் தர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us