ADDED : ஜூலை 02, 2025 01:36 AM

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை தினம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் முத்து தலைமை தாங்கினார்.
தனி தாசில்தார் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை ஊழியர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து பேசினர்.
தொடர்ந்து தனி தாசில்தார் ஜெயலட்சுமி இனிப்புகளை வழங்கினார். இதில் முகையூர் மற்றும் மணம்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் தாலுகா ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தாலுகா அலுவலக ஊழியர்கள் செய்தனர்.