ADDED : ஜன 03, 2024 12:11 AM

விழுப்புரம்
கோலியனுார் ஒன்றியம், கல்லப்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த போட்டிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை தாங்கினார். போட்டியில் மாணவர்கள் விமல்தாஸ், சத்யன் குழு முதலிடமும், மாணவிகள் திவ்யா, தர்ஷினி குழு இரண்டாமிடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற 2 அணிகள் புதுச்சேரியில் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள அடுத்த கட்ட தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்கள் விழுப்புரம் ரோட்டரி சங்கத் தலைவர் கன்யா ரமேஷ், ரோட்டரி சங்க கல்வி அறக்கட்டளைத் தலைவர் முத்து சரவணன், கல்வி அறக்கட்டளை செயலாளர் சரவணக்குமார், சங்க செயலாளர் அன்பழகன், பொருளாளர் சுரேஷ் குமரன், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பேசினர். பள்ளி ஆசிரியர்கள் ஆனந்த் விஜயகுமார், விஜயராகவன், ரவீந்திரன், சத்யபாமா, சிலம்பு செல்வி, பாமா உட்பட பலர் பங்கேற்றனர்.