ADDED : பிப் 06, 2024 06:40 AM

அவலுார்பேட்டை, : மேல்மலையனுாரில் பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்றனர்.
மேல்மலையனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்த வட்டார ஊராட்சி பி.டி.ஓ., குலோத்துங்கன் விக்கிர வாண்டிக்கும், கிராம ஊராட்சி பி.டி.ஓ., சரவண குமார் ஒலக்கூருக்கும் இடமாறுதல் செய்யப்பட் டனர்.
இவர்களுக்கு பதிலாக வானுாரில் பணிபுரிந்த துணை பி.டி.ஓ., சிவசண்முகம் பதவி உயர்வு பெற்று வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,வாகவும், செஞ்சியில் மண்டல துணை பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த சையது முகமது பதவி உயர்வு பெற்று கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாகவும் நேற்று மேல்மலையனுாரில் பொறுப்பேற்றனர்.