Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சுய வேலை வாய்ப்பு, கல்விக் கடன் சிறுபான்மையினருக்கு வழங்கல்

சுய வேலை வாய்ப்பு, கல்விக் கடன் சிறுபான்மையினருக்கு வழங்கல்

சுய வேலை வாய்ப்பு, கல்விக் கடன் சிறுபான்மையினருக்கு வழங்கல்

சுய வேலை வாய்ப்பு, கல்விக் கடன் சிறுபான்மையினருக்கு வழங்கல்

ADDED : ஜூன் 05, 2025 07:02 AM


Google News
விழுப்புரம்; தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலை வாய்ப்பு மற்றும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகர்ப் புறங்களில் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 2ல் பயன்பெற கிராம, நகர்ப் புறங்களில் 8 லட்சம் ரூபாய் வரை இருக்க வேண்டும்.

திட்டம் 1ன் கீழ் தனி நபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக 20 லட்சம் ரூபாய், திட்டம் 2ன்கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக 30 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

சுயஉதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2ன்கீழ் ஆண்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு 1.50 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.

மேலும், சிறுபான்மையினர் மாணவ, மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி படிப்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1ன்கீழ் 20 லட்சம் ரூபாய் வரை 3 சதவீதம் வட்டி விகிதம். திட்டம் 2 ன்கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவியருக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்தில் 30 லட்சம் ரூபாய் வரையிலும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

எனவே, சிறுபான்மையினர் மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம். கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us