ADDED : பிப் 09, 2024 11:09 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை சாலாமேடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அப்பகுதியில் சீனுவாசா நகர் தனியார் பள்ளி அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற அப்பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 35; என்பவரை கைது செய்து, பைக்கையும், ஆன் லைன் லாட்டரிக்கான ஆவணங்கள், மொபைல் போனையும் பறிமுதல் செய்தனர்.