ADDED : ஜன 25, 2024 05:24 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி, ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த செந்தில், 38; என்பவரது வீட்டில், ஆன் லைன் லாட்டரி பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது.
போலீசார், அதற்கான ஆவணங்களையும், 2 மொபைல் போன்கள், 7,800 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்து, செந்திலை கைது செய்தனர்.