ADDED : செப் 04, 2025 04:22 AM
விழுப்புரம் : மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த சித்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 75; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் திருப்பாச்சனுாரில் உள்ள சவுக்கு தோப்பில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.