Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தேசிய கருத்தரங்கம்

தேசிய கருத்தரங்கம்

தேசிய கருத்தரங்கம்

தேசிய கருத்தரங்கம்

ADDED : பிப் 25, 2024 05:24 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம், : மயிலம் பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் நடந்தது.

மணக்குள விநாயகர் மற்றும் மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் முரளி கிருஷ்ணன் வரவேற்றார்.

அண்ணா பல்கலைக்கழக உயர் மின்னழுத்த துறைத் தலைவர் கவுரிஸ்ரீ, கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

கல்விக்குழும செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில், புதுச்சேரி மின் துறையில் ஓய்வு பெற்ற செயற் பொறியாளர் சண்முக வடிவேலு, சென்னை, ஜி.கே., பவர் எக்ஸ்பர்டைசி இயக்குனர் செல்வம் ஆகியோர், மின் உபகரணங்களில் உயர் மின்னழுத்த தாக்கங்கள் குறித்து கூறினர்.

காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகம் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் கோப்பெருந்தேவி, மின்மாற்றில் பயன்படுத்தப்படும் நானோ தொழில்நுட்பம் பற்றி கூறினார்.

இரண்டு நாள் கருத்தரங்கில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உட்பட பல மாநிலங்களை சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

முடிவில், முதல்வர் ராஜப்பன் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us