Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தேசிய மக்கள் நீதிமன்றம் 2,586 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றம் 2,586 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றம் 2,586 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றம் 2,586 வழக்குகளுக்கு தீர்வு

ADDED : செப் 14, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம்,: மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,586 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 30.49 கோடி ரூபாய்க்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் அனைத்து தாலுகா கோர்ட்டுகளிலும், 22 அமர்வுகளாக நடந்தது.

விழுப்புரம் கோர்ட்டில் நீதிபதி தண்டபாணி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி வரவேற்றார்.

கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜ சிம்மவர்மன், எஸ்.சி., - எஸ்.டி., சிறப்பு நீதிமன்ற நிதிபதி பாக்கியஜோதி, போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா, சிறப்பு மாவட்ட நீதிபதி ஸ்ரீராம், குடும்பநல நீதிமன்ற நீதிபதி ராஜமகேஷ், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி குமரவர்மன், நீதிபதிகள் தமிழ்செல்வன், பழனிக்குமார், வெங்கடேசன், கவிதா, முருகன், பாலரத்னா, ராஜேஸ்வரி, சந்திரசகாசபூபதி, அரவிந்த்பாரதி முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர் சங்க தலைவர்கள் சகாதேவன், ராஜகுரு, பன்னீர்செல்வம், ராதாகிருஷ்ணன், அரசு வழக்கறிஞர்கள் சுப்ரமணியன், நடராஜன் வாழ்த்தி பேசினர். முகாமில், நிலுவையில் உள்ள 6000 வழக்குகளில், 2060 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு, 27.48 கோடி ரூபாய்க்கும், கோர்ட்டிற்கு வராத வங்கி வாராக்கடன் சார்ந்த, 4000 வழக்குகள் எடுக்கப்பட்டு, அதில் 526 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு 3.01 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.

மொத்தம் 2,586 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 30 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரத்து 831 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

நீதிபதி ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us