ADDED : ஜூன் 10, 2025 10:16 PM
திண்டிவனம்; திண்டிவனத்தில் மாமியாரை காணவில்லை என மருமகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திண்டிவனம், பூதேரி கோட்டை மேடு, ஈஸ்டன் தோப்பில் வசிப்பவர் அப்துல் உஸ்மான், 52; இவரது மாமியார் நுார்ஜஹான், 70; இவர் கடந்த 5 ம் தேதி காலை 10:00 மணியளவில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை.
இதுகுறித்து, அப்துல் உஸ்மான் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நட்தி வருகின்றனர்.