ADDED : ஜன 05, 2024 10:12 PM
திண்டிவனம் : ஆண்டாள் நாச்சியார் சபை சார்பில் மார்கழி மாத சிறப்பு பட்டி மன்றம் நடந்தது.
திண்டிவனத்திலுள்ள லட்சுமிசந்தர் மகாலில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, ஆண்டாள் நாச்சியார் சபை சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
'ராமருக்கு தொண்டு செய்தவர்களுள் மிகவும் சிறப்பு பெற்றவர் அனுமனா! இலக்குவனா!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் அனுமன் அணியில் ஏழுமலை, பாண்டியன், விஷ்ணகுமார், ஆதிசீனுவாசனும், இலக்குவன் அணியில் கண்ணையன், பலராமன், கோபி, பழசம்த்து ஆகியோர் பேசினர். நடுவராக தமிழ்ச்சங்க மாவட்ட தலைவர் துரைராசமாணிக்கம் இருந்தார்.