ADDED : ஜன 07, 2024 05:22 AM

திண்டிவனம்: திண்டிவனம் ரோஷணை (இந்து) நகராட்சி தொடக்கப் பள்ளியில், மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது.
மேலாண்மைக் குழு தலைவர் மெகராஜ் பேகம் தலைமை தாங்கினார். கவுன்சிலர் தில்ஷாத் பேகம் முன்னிலை வகித்தார். திண்டிவனம் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செல்வகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன், ஒலக்கூர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் முல்லை ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் பள்ளியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது.
இடைநிலை ஆசிரியர் அனீஸ்பாத்திமா நன்றி கூறினார்.