Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நிலத் தகராறு: 8 பேர் மீது வழக்கு

நிலத் தகராறு: 8 பேர் மீது வழக்கு

நிலத் தகராறு: 8 பேர் மீது வழக்கு

நிலத் தகராறு: 8 பேர் மீது வழக்கு

ADDED : மே 23, 2025 12:29 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் அருகே நிலத் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பைச் சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த சேர்ந்தனுார் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி, 37; இவரது அண்ணன் தேவராசு, 40; இவர்களுக்குள் பொதுவாக உள்ள குடும்ப நிலம் 22 ஏக்கரை, இரண்டாக பிரித்து பயிர் செய்து வருகின்றனர்.

இதற்காக நடந்த சொத்து பாக பிரிவினையில், பிரச்னை ஏற்பட்டு, இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி, இவர்களது வீட்டின் முன் இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து, இரு தரப்பினர் அளித்த புகார்களின் பேரில், தேவராசு, ராமசாமி உட்பட இரு தரப்பிலும் 8 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us