Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

ADDED : மே 25, 2025 04:43 AM


Google News
மயிலம் : மயிலம் அருகே கூலி தொழிலாளி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மயிலம் அருகே உள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்தகுமார், 56; கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். கடந்த 19ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

நேற்று காலை 11:00 மணிக்கு அதே கிராம புளியந்தோப்பு பகுதியில் மரத்தில் குமார் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. மயிலம் போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us