ADDED : செப் 18, 2025 03:49 AM
விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த திருவாமாத்துாரை சேர்ந்தவர் தண்டபாணி, 40; டூவீலர் மெக்கானிக். இவர் கடந்த 11ம் தேதி ஒரு சவரன், 6 கிராம் நகைளை பெட்ரூம் இரும்பு பீரோவில் வைத்திருந்தார். கடந்த 13ம் தேதி மீண்டும் பார்த்தபோது, நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.