Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ டிஜிட்டல் பண பரிவர்த்தனை கண்டக்டர்களுக்கு ஊக்கப்பரிசு

டிஜிட்டல் பண பரிவர்த்தனை கண்டக்டர்களுக்கு ஊக்கப்பரிசு

டிஜிட்டல் பண பரிவர்த்தனை கண்டக்டர்களுக்கு ஊக்கப்பரிசு

டிஜிட்டல் பண பரிவர்த்தனை கண்டக்டர்களுக்கு ஊக்கப்பரிசு

ADDED : செப் 14, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம்:விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக கோட்டத்தில், அதிகளவு டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்த ஊழியர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில், டிக்கெட் வழங்க மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் பயணிகளிடமிருந்து அதிகமாக பயணச்சீட்டு கட்டணம் வசூலிக்கும் பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், விழுப்புரம் கோட்டம் சார்பில், கடந்த ஆகஸ்டு மாதத்தில், அதிக பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ததற்காக, ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும், 2 கண்டக்டர்கள் வீதம், 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

விழுப்புரம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேலாண் இயக்குநர் குணசேகரன் பரிசு வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us