ADDED : ஜன 06, 2024 04:58 AM
விழுப்புரம், : விழுப்புரம் அருகே கணவன் மாயமானதாக மனைவி போலீசில் புகார் அளித்தார்.
விழுப்புரம் அடுத்த கல்பட்டு காலனி பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ், 40; இவர், விழுப்புரத்தில் உள்ள ஹோட்டல்களில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த டிச.31ம் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி குழந்தைஏசு கொடுத்துள்ள புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.