Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கண்டாச்சிபுரத்தில் பட்டமளிப்பு விழா

கண்டாச்சிபுரத்தில் பட்டமளிப்பு விழா

கண்டாச்சிபுரத்தில் பட்டமளிப்பு விழா

கண்டாச்சிபுரத்தில் பட்டமளிப்பு விழா

ADDED : பிப் 09, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிகுலேஷன் பள்ளியில் குழந்தைப் பருவப்படிப்பை முடித்து பள்ளிப்படிப்பைத் தொடங்கும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு, அரியலுார் ராம்கோ சிமென்ட் மேனேஜர் அருண்விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராஜாராமன், காரணை பெரிச்சானுார் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தரணிதரன், அன்னியூர் அலிவ் ட்ரீ பள்ளி தாளாளர் இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தாளாளர் தேன்மொழி ராஜேந்திரன் வரவேற்றார். விழாவில் ஓய்வுபெற்ற வேளாண் இணை இயக்குனர் இளவரசன், சுகாதாரத்துறை கண்ணன், ஆசிரியர் ராஜாராமன் ஆகியோர் பேசினர்.

பின்னர் சிறப்பு விருந்தினர் அருண்விஜய் யு.கே.ஜி., மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

விழாவில் பள்ளி முதல்வர் வாசுகி, ஐ.டி.ஐ., முதல்வர் நுார் முகம்மது, மேலாளர்கள் மஞ்சுளா, செல்லம்மாள், முரளி, பயிற்சி அலுவலர்கள் குமரேசன், இளஞ்செழியன், அருண், ஆனந்தராஜ், சத்தியமூர்த்தி மற்றும் மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

அறங்காவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us