ADDED : ஜன 10, 2024 11:10 PM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்ப்பில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கோலப் போட்டி நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்தலிங்கமடம் கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு கோலப் போட்டி நடந்தது.
தேர்தல் துணை தாசில்தார் முன்னிலையில் நடந்த போட்டியில் சித்தலிங்கமடம் பகுதியில் உள்ள 33 மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கோலப் போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சித்தலிங்கமடம் ஆர்.ஐ., பாலாஜி, வி.ஏ.ஓ., லெனின் குமார் உட்பட மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்றனர்.