Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பாம்பு கடித்து சிறுமி பலி

பாம்பு கடித்து சிறுமி பலி

பாம்பு கடித்து சிறுமி பலி

பாம்பு கடித்து சிறுமி பலி

ADDED : செப் 08, 2025 02:51 AM


Google News
திண்டிவனம்: மாந்தோப்பில் பாட்டியுடன் துாங்கிய, 5 வயது சிறுமி பாம்பு கடித்ததில் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கிராண்டிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துலுக்காணம். இவரது தாயார் லட்சுமி, 60; அதே பகுதியில் உள்ள ஸ்ரீதர் என்பவரின் மாந்தோப்பில் காவல் பணி புரிந்து வந்தார்.

நேற்று முன்தினம், இரவு லட் சுமி, துலுக்காணத்தின் மகள் தேவி, 5 ; உடன், மாந்தோப்பில் துாங்கினார். நள்ளிரவில் மூதாட்டி மற்றும் சிறுமியை பாம்பு கடித்துள்ளது.

உடனே இருவரையும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி நேற்று மாலை 5:00 மணியளவில் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார்.

மூதாட்டி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us