Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பவுர்ணமி சிறப்பு பூஜை

பவுர்ணமி சிறப்பு பூஜை

பவுர்ணமி சிறப்பு பூஜை

பவுர்ணமி சிறப்பு பூஜை

ADDED : செப் 10, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : விழுப்புரம் புதுச்சேரி சாலையிலுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணி முதல் காலை 7:00 வரை பால், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் மலர்களால் அர்ச்சனை மற்றும் ஆராதனை நடந்தது.

தொடர்ந்து காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையடுத்து, 11:30 மணியவில் அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

ஏற்பாடுகளை உபயதாரர்கள் ஜெயபாலன், கவிதா, டாக்டர் சரவணன், டாக்டர் பிரித்திசக்தி பேபி லக்ஷனா செய்திருந்தனர்.

அப்போது, பழனிசாமி, சீத்தாராமன், பட்டுராஜா, இன்பசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us