விழுப்புரம் : விழுப்புரம் அருகே பூச்சி மருந்து குடித்த மூதாட்டி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயா,65; இவர், நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 29ம் தேதி வீட்டில் வயிற்றுவலியால் அவதிபட்ட அவர், பூச்சி மருந்து குடித்து மயங்கியுள்ளார்.
அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜயா, சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இது குறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.