Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உழவர் நலத்துறை திட்டம் தைலாபுரத்தில் துவக்க விழா

உழவர் நலத்துறை திட்டம் தைலாபுரத்தில் துவக்க விழா

உழவர் நலத்துறை திட்டம் தைலாபுரத்தில் துவக்க விழா

உழவர் நலத்துறை திட்டம் தைலாபுரத்தில் துவக்க விழா

ADDED : மே 30, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
வானுார்; தைலாபுரம் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டத்தை ஒன்றிய சேர்மன் துவக்கி வைத்தார்.

வானூர் வட்டாரத்தில் உள்ள 82 வருவாய் கிராமங்களில் உழவரைத்தேடி வேளாண்மை என்ற உழவர் நலத்துறை திட்டம் துவக்கப்பட உள்ளது. வேளாண்மை உழவர் நலத்துறையின் வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் இதர சார்பு துறையை சேர்ந்த அலுவலர்களின் உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தைலாபுரத்தில் இந்த திட்டத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. வானூர் ஒன்றிய சேர்மன் உஷா முரளி துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார்.

வானூர் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் வரவேற்றார். வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சுமதி, துறையின் திட்டங்கள் குறித்தும், மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் முன் வருவது குறித்தும் பேசினர்.

ரங்கநாதபுரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் தண்டபாணி விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், கால்நடை பராமரித்துறை கால்நடை உதவி இயக்குனர் நடராஜன் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us