Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

ADDED : ஜன 12, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
செஞ்சி : செஞ்சியில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஏ.இ.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர்கள் தேவராஜ், அறிவழகன், வேலுசாமி தலைமை தாங்கினர். நிர்வாகிகள் ஷேக்மூசா, கோவிந்தராஜ், கிளியோபாஸ், அருள்தாஸ், சிந்தாமணி, அஸ்கர் ஆகியோர் விளக்க உரையாற்றினர். செஞ்சி தாலுகாவைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், தொடக்க கல்வித் துறையில் பணியாற்றக்கூடிய 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், டிட்டோ ஜாக் உயர்மட்டக் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்பு கொண்ட 12 கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us