ADDED : ஜன 25, 2024 05:34 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே வயிற்று வலியால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அருகே பில்லுார் கிராமத்தை சேர்ந்தவர் ராசு,70; வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட இவர், நேற்று முன்தினம் வலி தாங்க முடியாமல் வீட்டில் எலிபேஸ்ட் சாப்பிட்டார். உடனே அவரை குடும்பத்தார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.